பதிவு செய்த நாள்
31 ஜூலை2012
23:44
மும்பை: பொதுத் துறையை சேர்ந்த சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (சி.சி.ஐ.,) நிறுவனத்தின் ஆறு சிமென்ட் தொழிற்சாலைகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விற்பனை மூலம் 1, 700 கோடி ரூபாய் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உற்பத்தி திறன்பல்வேறு மாநிலங்களில், சி.சி.ஐ.,க்கு சொந்தமாக 10 சிமென்ட் ஆலைகள் உள்ளன. இவற்றில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, செயல்படாமல் உள்ள ஆறு ஆலைகள் (மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹரியானா மற்றும் டில்லியில் தலா ஓர் ஆலை, சட்டீஸ்கரில் இரண்டு ஆலைகள்) விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றுடன் டில்லியில் உள்ள சிமென்ட் அரவை மையமும் விற்கப்பட உள்ளது. இரண்டு மாதங்களில், இவ்விற்பனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆறு சிமென்ட் ஆலைகளின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 26.5 லட்சம் டன்னாக உள்ளது. சராசரியாக, ஒரு சிமென்ட் ஆலையின் விலை, அதன் உற்பத்தி திறன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. ஒரு டன் உற்பத்தி திறனுக்கு 110-120 டாலர் என்ற அளவில் நிர்ணயிக்கப்படுவதாக, இத்துறையை சேர்ந்த வல்லுனர் ஒருவர் தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஆறு ஆலைகள் மூலம் 1,600 - 1,759 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிகிறது.நிறுத்தி வைப்புஇந்த ஆலைகளின் சொத்துக்களை மதிப்பீடு செய்யவும், விற்பனைக்கான வழிகாட்டுதலை வழங்கவும், குழு ஒன்றை, தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியம் (பீ.ஐ.எப்.ஆர்.,) அமைத்துள்ளது.ஆந்திராவில், நலிவடைந்த அடிலாபாத் சிமென்ட் ஆலையின் விற்பனை,தொழிலாளர்களின் எதிர்ப்பு மற்றும் வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆலையை, மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று ஆலைகள் அசாம் (போகாஜன்), ஆந்திரா (தன்துர்), இமாச்சலப்பிரதேசம் (ரஜ்பன்) ஆகிய மாநிலங்களில் இயங்கி வருகின்றன. 14 லட்சம் டன்இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சிமென்ட் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 14 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இந்நிறுவனத்தில் 988 பேர் பணிபுரிகின்றனர்.தனியார் துறையை சேர்ந்த அல்ட்ராடெக் சிமென்ட், லபார்கே எஸ்.ஏ. ஹோல்சிம் மற்றும் பிர்லா கார்ப்பரேஷன் நிறுவனங்கள், அவற்றின் சிமென்ட் உற்பத்தி திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|