இந்துஸ்தான் ஸிங்க் வருவாய் ரூ.2,748 கோடி இந்துஸ்தான் ஸிங்க் வருவாய் ரூ.2,748 கோடி ... சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி 64 சதவீதம் வளர்ச்சி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்றுமதி 64 சதவீதம் வளர்ச்சி ...
ஆறு சிமென்ட் ஆலைகளை விற்க மத்திய அரசு முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2012
23:44

மும்பை: பொதுத் துறையை சேர்ந்த சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (சி.சி.ஐ.,) நிறுவனத்தின் ஆறு சிமென்ட் தொழிற்சாலைகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விற்பனை மூலம் 1, 700 கோடி ரூபாய் திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உற்பத்தி திறன்பல்வேறு மாநிலங்களில், சி.சி.ஐ.,க்கு சொந்தமாக 10 சிமென்ட் ஆலைகள் உள்ளன. இவற்றில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, செயல்படாமல் உள்ள ஆறு ஆலைகள் (மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹரியானா மற்றும் டில்லியில் தலா ஓர் ஆலை, சட்டீஸ்கரில் இரண்டு ஆலைகள்) விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றுடன் டில்லியில் உள்ள சிமென்ட் அரவை மையமும் விற்கப்பட உள்ளது. இரண்டு மாதங்களில், இவ்விற்பனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆறு சிமென்ட் ஆலைகளின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 26.5 லட்சம் டன்னாக உள்ளது. சராசரியாக, ஒரு சிமென்ட் ஆலையின் விலை, அதன் உற்பத்தி திறன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. ஒரு டன் உற்பத்தி திறனுக்கு 110-120 டாலர் என்ற அளவில் நிர்ணயிக்கப்படுவதாக, இத்துறையை சேர்ந்த வல்லுனர் ஒருவர் தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஆறு ஆலைகள் மூலம் 1,600 - 1,759 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிகிறது.நிறுத்தி வைப்புஇந்த ஆலைகளின் சொத்துக்களை மதிப்பீடு செய்யவும், விற்பனைக்கான வழிகாட்டுதலை வழங்கவும், குழு ஒன்றை, தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியம் (பீ.ஐ.எப்.ஆர்.,) அமைத்துள்ளது.ஆந்திராவில், நலிவடைந்த அடிலாபாத் சிமென்ட் ஆலையின் விற்பனை,தொழிலாளர்களின் எதிர்ப்பு மற்றும் வழக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆலையை, மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று ஆலைகள் அசாம் (போகாஜன்), ஆந்திரா (தன்துர்), இமாச்சலப்பிரதேசம் (ரஜ்பன்) ஆகிய மாநிலங்களில் இயங்கி வருகின்றன. 14 லட்சம் டன்இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சிமென்ட் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 14 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. இந்நிறுவனத்தில் 988 பேர் பணிபுரிகின்றனர்.தனியார் துறையை சேர்ந்த அல்ட்ராடெக் சிமென்ட், லபார்கே எஸ்.ஏ. ஹோல்சிம் மற்றும் பிர்லா கார்ப்பரேஷன் நிறுவனங்கள், அவற்றின் சிமென்ட் உற்பத்தி திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளன.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)