பதிவு செய்த நாள்
31 ஜூலை2012
23:45
புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 64 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பின் துணை தலைவர் பி.சி.நம்பியார் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகள், நாட்டின் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் அம்மண்டலங்களில் இடம்பெறும் தொழில் நிறுவனங்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.சென்ற ஜூன் மாதம் வரை, நாடு தழுவிய அளவில், 158 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை இம்மண்டலங்களில், 2.13 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 9.20 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.மத்திய அரசு இதுவரை, 588 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொள்கை அளவிலான ஒப்புதலையும், 386 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியும் வழங்கியுள்ளது என, நம்பியார் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|