பதிவு செய்த நாள்
31 ஜூலை2012
23:47
நியூயார்க்: ஹூண்டாய் நிறுவனம், அமெரிக்காவில் விற்பனை செய்த, 2.20 லட்சம் கார்களில் உள்ள பாதுகாப்பு காற்றுப் பைகளில் கோளாறு உள்ளதை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, அந்த கார்களை திரும்ப பெற்று, கோளாறுகளை இலவசமாக சரி செய்து தருவதாக அறிவித்துள்ளது.இதன்படி, இந்நிறுவனம், கடந்த 2007-2009ம் ஆண்டுகளில் விற்பனை செய்த, 1.99 லட்சம் "சாண்டா எப்.ஈ' கார்களை திரும்ப பெறுகிறது. இந்த கார்களில், ஓட்டுனர் சற்று பருமனாக இருக்கும்பட்சத்தில், விபத்தின் போது, உயிர்காக்கும் காற்றுப்பை, போதிய அளவில் விரிவடையாமல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதற்கு நேர்மாறாக, 2012-13ம் "சொனாட்டா' மாடல் கார்களில், விபத்து நிகழாத போதே, காற்றுப் பைகள் திடீரென்று விரிந்து, ஓட்டுனருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. இதனால், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட 22,512 கார்களை திரும்ப பெற்று, கோளாறை சரி செய்து தருவதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|