செயற்கை ரப்பர் உற்பத்தி 11சதவீதம் சரிவு செயற்கை ரப்பர் உற்பத்தி 11சதவீதம் சரிவு ... விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டீசல் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டீசல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 92 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2012
23:50

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்றும் நன்கு இருந்தது. ஐரோப்பா மற்றும் சீனா தவிர்த்த இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதி நிலை ஆய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டது. எல்லோரும் எதிர்பார்த்ததை போன்று, வங்கிகளுக்கான,"ரெப்போ' வட்டி விகிதம் மற்றும் சி.ஆர்.ஆர்., விகிதங்கள் குறைக்கப்பட வில்லை. இந்நிலையிலும், வங்கித் துறையில், பல வங்கி பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து காணப்பட்டது. இது, ஆச்சயம் அளிப்பதாக உள்ளது என மும்பை பங்கு சந்தையின் புரோக்கர் ஒருவர் தெரிவித்தார்.நேற்றைய வர்த்தகத்தில், எண்ணெய் சுத்தகரிப்பு, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், மருந்து மற்றும் உலோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 92.50 புள்ளிகள் உயர்ந்து, 17,236.18 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,253.67 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,004.09 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும், 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்,"நிப்டி' 29.20 புள்ளிகள் அதிகரித்து, 5,229 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,234.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,154.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.






Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)