பதிவு செய்த நாள்
31 ஜூலை2012
23:50
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய்கிழமையன்றும் நன்கு இருந்தது. ஐரோப்பா மற்றும் சீனா தவிர்த்த இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதி நிலை ஆய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டது. எல்லோரும் எதிர்பார்த்ததை போன்று, வங்கிகளுக்கான,"ரெப்போ' வட்டி விகிதம் மற்றும் சி.ஆர்.ஆர்., விகிதங்கள் குறைக்கப்பட வில்லை. இந்நிலையிலும், வங்கித் துறையில், பல வங்கி பங்குகளின் விலை, மிகவும் சரிவடைந்து காணப்பட்டது. இது, ஆச்சயம் அளிப்பதாக உள்ளது என மும்பை பங்கு சந்தையின் புரோக்கர் ஒருவர் தெரிவித்தார்.நேற்றைய வர்த்தகத்தில், எண்ணெய் சுத்தகரிப்பு, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம், மருந்து மற்றும் உலோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம் போன்ற துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 92.50 புள்ளிகள் உயர்ந்து, 17,236.18 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்கு சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,253.67 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,004.09 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும், 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்,"நிப்டி' 29.20 புள்ளிகள் அதிகரித்து, 5,229 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,234.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,154.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|