பதிவு செய்த நாள்
02 ஆக2012
13:35
செக் நாட்டை மையமாக கொண்டு செயல்டும், ஸ்கோடா கார் நிறுவனம், வோக்ஸ்வாகன் குழுமத்தை சேர்ந்தது. இந்தியாவல் ஸ்கோடா ஆட்டோ இந்தியா என்ற பெயரில் இயங்குகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில், ஃபாபியோ, ராபிட், லாரா, யெடி மற்றும் சூப்பர்ப் ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்கிறது. இந்த கார்களின் விலை ரூ.4.46 லட்சத்தில் இருந்து ரூ.24 லட்சம் வரை உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது, கடந்த ஜூன் மாதம் ஸ்கோடா கார்களின் விற்பனை, 82 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் இந்த நிறுவனம், 2,610 கார்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த ஜூனில், 4,923 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் ஸ்கோடா ராபிட் கார் தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஜூனில், 3,246 ராபிட் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த சூழ்நிலையில், தனது அனைத்து மாடல் கார்களின் விலையை, ஒரு சதவீதத்தில் இருந்து 1.8 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக, ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு, ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. உற்பத்தி செலவு அதிகரிப்பே, இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|