பதிவு செய்த நாள்
02 ஆக2012
23:47
புதுடில்லி: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), வீட்டு வசதி மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளது.இதன்படி, 30 லட்ச ரூபாய் வரை உள்ள வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி, 10.50 சதவீதத்தில் இருந்து 10.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கு மேற்பட்ட, அதே சமயம் 75 லட்சம் ரூபாய் வரை உள்ள கடனுக்கான வட்டி 10.75 சதவீதத்தில் இருந்து 10.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.ஏழு ஆண்டு தவணையில் செலுத்தக்கூடிய கார் கடனுக்கான வட்டி, 11.25 சதவீதத்தில் இருந்து 10.75 சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு, வாடிக்கையாளர்கள் செலுத்தும் மாத தவணைத் தொகை 1,725லிருந்து 1,699 ரூபாயாக குறையும். இவ்வகையில், ஓராண்டில் 312 ரூபாய் மிச்சமாகும்.அதேசமயம், இவ்வங்கி, 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்து, 8.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு, வரும் 7ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.பஞ்சாப் நேஷனல் பேங்க்: பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓராண்டு முதிர்வு காலத்தை கொண்ட, குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டியை 8.75 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதே வட்டி விகிதம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஓராண்டு மற்றும் 1,111 நாட்களுக்கான டெபாசிட்டிற்கும் பொருந்தும் என, இவ்வங்கி தெரிவித்துள்ளது. புதிய வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|