பதிவு செய்த நாள்
02 ஆக2012
23:47
புதுடில்லி: இந்தியா மற்றும் நைஜீரியா இடையிலான பரஸ்பர வர்த்தகம், சென்ற நிதியாண்டில், 95,150 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக, நைஜீரிய நாட்டிற்கான இந்திய தூதர் மஹேஷ் சச்தேவ் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:ஆப்ரிக்க கூட்டமைப்பை சேர்ந்த நைஜீரியாவில், கச்சா எண்ணெய் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. நைஜீரியாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலிருந்து, ரசாயனம், மருந்து, ஜவுளி போன்றவற்றை நைஜீரியா இறக்குமதி செய்து கொள்கிறது.இந்தியா, நைஜீரியா இடையிலான பரஸ்பர வர்த்தகம், சென்ற 2011 - 12ம் நிதியாண்டில், 1,730 கோடி டாலராக (95,150 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இந்த வர்த்தகம், முந்தைய 2010 - 11ம் நிதியாண்டில், 1,270 கோடி டாலர் (69,850 கோடி ரூபாய்) என்றளவில் இருந்தது. ஆக, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், 36 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில்,நைஜீரியா, இந்தியாவிற்கு மேற்கொண்ட ஏற்றுமதி 200 கோடி டாலரிலிருந்து, 270 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதே சமயம், இந்தியாவில் இருந்து நைஜீரியா மேற்கொண்ட இறக்குமதி, 1,070 கோடி டாலரிலிருந்து, 1,460 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இவ்வாறு மஹேஷ் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|