பதிவு செய்த நாள்
02 ஆக2012
23:49
புதுடில்லி: நாட்டில் தொலைதொடர்பு சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, நடப்பு 2012ம் ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 95.13 கோடியாக உயர்ந்துள்ளது. இது, டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில், 92.65 கோடியாக இருந்தது. ஆக, இக்காலாண்டில், பயனாளிகளின் எண்ணிக்கை, 2.68 சதவீதம் உயர்ந்துள்ளது என, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.சென்ற மார்ச் நிலவரப்படி, அலைபேசி (ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பம்) வாடிக்கையாளர் எண்ணிக்கை, 91.92 கோடியாக அதிகரித்துள்ளது. இது, டிசம்பர் மாத எண்ணிக்கையை (89.38 கோடி) விட, 2.83 சதவீதம் அதிகமாகும்.அலைபேசி சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில், சாதாரண தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற மார்ச் நிலவரப்படி, சாதாரண தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை, 3.22 கோடியாக இருந்தது. இது, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், 3.27 கோடியாக உயர்ந்திருந்தது.சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அகண்ட அலைவரிசை சந்தாதாரர் எண்ணிக்கை, 2.10 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.29 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|