பதிவு செய்த நாள்
02 ஆக2012
23:51
புதுடில்லி: மத்திய அரசு, பிராண்டு பெயருடன், "பாக்கெட்டு' களில் அடைக்கப்பட்ட ஐந்து கிலோ வரையிலான சமையல் எண்ணெய், ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. மதிப்பீடுபோதிய அளவிற்கு பருவமழை பெய்யாததால், ஒரு சில எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை உயர்வதை கட்டுப்படுத்தும் நோக்கில், அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம், இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில், 50 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2008ம் ஆண்டு, "பிராண்டு' அல்லாத சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை, வரும் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்ற ஆண்டு நவம்பர் 1ம் தேதி, சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, "பிராண்டு' பெயரில், ஐந்து கிலோ வரையிலான சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, வரும் அக்டோபர் 31ம் தேதி வரை, இவ்வகை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.ஆனால், நடப்பாண்டில், பருவமழை பொய்த்ததால், கரீப் பருவ எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஜூலை 27ம் தேதி நிலவரப்படி, நாட்டின் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு, ஓரளவிற்கு சென்ற ஆண்டை ஒத்த அளவில், அதாவது 1.38 கோடி ஹெக்டேராக உள்ளது. எனினும், குஜராத், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில், வறட்சி காரணமாக நிலக்கடலை பயிரிடுவது குறைந்துள்ளது. இதனால், கடலை எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, 5 கிலோ வரையிலான "பிராண்டட்' சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்துள்ளது. எனினும், நடப்பு ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி, சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட, சமையல் எண்ணெய் வகைகளை ஏற்றுமதி செய்ய தடையில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலை எண்ணெய்இந்தியா, ஆண்டுக்கு 90 லட்சம் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து கொள்கிறது. எனினும், கடலை எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவை, சிறிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|