இந்திய உணவு வகைகளை விரும்பும் வெளிநாட்டினர் இந்திய உணவு வகைகளை விரும்பும் வெளிநாட்டினர் ... அதிக வருவாய் வழங்கிய "கில்ட் பண்டு' திட்டங்கள் அதிக வருவாய் வழங்கிய "கில்ட் பண்டு' திட்டங்கள் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
"பாக்கெட்'சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2012
23:51

புதுடில்லி: மத்திய அரசு, பிராண்டு பெயருடன், "பாக்கெட்டு' களில் அடைக்கப்பட்ட ஐந்து கிலோ வரையிலான சமையல் எண்ணெய், ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. மதிப்பீடுபோதிய அளவிற்கு பருவமழை பெய்யாததால், ஒரு சில எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை உயர்வதை கட்டுப்படுத்தும் நோக்கில், அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம், இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் தேவையில், 50 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2008ம் ஆண்டு, "பிராண்டு' அல்லாத சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை, வரும் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்ற ஆண்டு நவம்பர் 1ம் தேதி, சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, "பிராண்டு' பெயரில், ஐந்து கிலோ வரையிலான சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, வரும் அக்டோபர் 31ம் தேதி வரை, இவ்வகை ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.ஆனால், நடப்பாண்டில், பருவமழை பொய்த்ததால், கரீப் பருவ எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஜூலை 27ம் தேதி நிலவரப்படி, நாட்டின் எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு, ஓரளவிற்கு சென்ற ஆண்டை ஒத்த அளவில், அதாவது 1.38 கோடி ஹெக்டேராக உள்ளது. எனினும், குஜராத், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில், வறட்சி காரணமாக நிலக்கடலை பயிரிடுவது குறைந்துள்ளது. இதனால், கடலை எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, 5 கிலோ வரையிலான "பிராண்டட்' சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்துள்ளது. எனினும், நடப்பு ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி, சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட, சமையல் எண்ணெய் வகைகளை ஏற்றுமதி செய்ய தடையில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கடலை எண்ணெய்இந்தியா, ஆண்டுக்கு 90 லட்சம் டன் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து கொள்கிறது. எனினும், கடலை எண்ணெய்,சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவை, சிறிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)