பதிவு செய்த நாள்
02 ஆக2012
23:51
புதுடில்லி: சென்ற ஜூன் வரையிலான முதல் காலாண்டில், "கில்ட் பண்டு' எனப்படும், அரசு கடன்பத்திரங்களில் முதலீடு செய்யும் பரஸ்பர நிதி திட்டங்கள் சிறந்த வருவாயை வழங்கியுள்ளதாக, வேல்யூ ரீசர்ச் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம், இவ்வகை திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 3,659 கோடி ரூபாயில் இருந்து, 3,266 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.குறுகிய கால முதலீடுமதிப்பீட்டு காலத்தில், குறுகிய கால முதலீட்டின் அடிப்படையிலான "கில்ட் பண்டு' திட்டங்கள், சராசரியாக 2.3 சதவீத வருவாயை வழங்கியுள்ளன. இது, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களில், 3.5 சதவீதமாக உயர்ந்து காணப்பட்டது."கில்ட் பண்டு' திட்டங்கள், கவர்ச்சிகரமான "கோல்டு பண்டு' திட்டங்களை விட, அதிக வருவாயை வழங்கியுள்ளன. சென்ற ஜூன் வரையிலான காலாண்டில் "கோல்டு பண்டு' திட்டங்கள், சராசரியாக 2.4 சதவீத வருவாயை வழங்கியுள்ளன. மேலும், இத்திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 2 சதவீதம் அல்லது 200 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது."கில்ட் பண்டு' திட்டங்களில் வருவாய் அதிகரித்துள்ள போதிலும், இவற்றின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு உயராமல் உள்ளதற்கு, நிதிச்சந்தையில் நிலவும் அசாதாரணமான சூழலே காரணம் என்று கூறப்படுகிறது.இதர பரஸ்பர நிதி திட்டங்களை விட, "கில்ட் பண்டு' திட்டங்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், அது முதலீடுகளை போதுமான அளவிற்கு ஈர்க்கவில்லை.மேலும், நிறுவனங்கள், நேரடியாக அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதன் காரணமாகவும், "கில்ட் பண்டு' திட்டங்களில் முதலீடு பெருமளவு குவியவில்லை. மேலும் இவ்வகை திட்டங்கள் அதிக ஏற்றத் தாழ்வு கொண்டவை என்பதால், முதலீட்டாளர்கள், குறுகிய கால அடிப்படையிலேயே இவற்றில் முதலீடு மேற்கொள்கின்றனர் என, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.வட்டி விகிதம்மதிப்பீட்டு காலத்தில், சில்லரை முதலீட்டாளர்கள், சராசரியாக 2.4 சதவீத வருவாயை வழங்கிய, நிலையான முதிர்ச்சி கால திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், வட்டி விகிதம் சரியும்பட்சத்தில், இத்திட்டங்கள் கவர்ச்சியை இழக்கும் என, இத்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|