பதிவு செய்த நாள்
02 ஆக2012
23:54
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று மந்தமாக இருந்தது. லாப நோக்கம் கருதி, அதிக எண்ணிக்கையில், பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய வங்கி, அந்நாட்டின் பொருளாதர வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில்,சிறப்பு திட்டங்கள் ஏதும் அறிவிக்கவில்லை. இதையடுத்து, இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.இருப்பினும், ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்டத்தில், நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற நிலைப்பாட்டால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஓரளவிற்கு நன்கு இருந்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, வங்கி, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது. இருப்பினும், பொறியியல், நுகர்பொருட்கள், மின்சாரம் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓர் அளவிற்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 33.02 புள்ளிகள் சரிவடைந்து, 17, 224.36 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17, 246.01 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17, 157.28 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 12.75 புள்ளிகள் குறைந்து, 5, 227.75 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5, 236.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5, 209.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|