மெட்ராஸ் சிமென்ட்ஸ்நிகர லாபம் ரூ.123 கோடி மெட்ராஸ் சிமென்ட்ஸ்நிகர லாபம் ரூ.123 கோடி ... சில்லரை வர்த்தக துறை 67,500 கோடி டாலராக உயரும் சில்லரை வர்த்தக துறை 67,500 கோடி டாலராக உயரும் ...
வர்த்தகம் » ஜவுளி
இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2012
23:36

திருப்பூர்: இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு தேவையான நூலிழை கொள்முதலுக்கு குறைந்த விலை நிர்ணயித்திருப்பதால், வெளிச் சந்தையில் வாங்க முடியாமல் கூட்டுறவு சங்கங்கள் திணறுகின்றன.பொங்கல் பண்டிகைபொங்கல் பண்டிகையின் போது, இலவச வேட்டி, சேலைகளை தமிழக அரசு வழங்குகிறது. இதற்கான வேட்டி, சேலைகள், மாநிலம் முழுவதும் உள்ள விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோ-ஆப்டெக்ஸ் மூலம் இதற்கான உற்பத்தி குறியீடுகள் சங்கங்களுக்கு வழங்கி, உற்பத்தி செய்து, கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு இத்திட்டத்தின் கீழ், 1.86 கோடி வேட்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.கூட்டுறவு சங்கங்களுக்கு, நடப்பு நிதியாண்டிற்கான உற்பத்திக் குறியீடுகள் கடந்த ஜூன் 28ல் வழங்கப்பட்டன. ஆறு மாத அவகாசத்தின்படி, பணியை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும். ஆனால், உற்பத்தி குறியீடு வழங்கப்பட்ட போதிலும், மூலப்பொருளான நூலிழைகள் சங்கங்களுக்கு அனுப்பப்படவில்லை.விதிமுறைவிதிமுறைகளின்படி, நூலிழைகளை, கூட்டுறவுத்துறை நூற்பாலைகள் மூலம் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். எட்டயபுரம், கிருஷ்ணகிரி, ஆண்டிபட்டி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள, கூட்டுறவு ஆலைகளிலிருந்து வார்ப் நூல் 40 ரகம் வழங்க வேண்டும். ஆனால், அந்த ஆலைகளில், தேவையான அளவு உற்பத்தி இல்லாததால், வெளிச் சந்தையில் கொள்முதல் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.விலை நிர்ணயம்சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள், தங்களுக்கு விருப்பமான ஆலைகளில் இருந்து நூலிழை களை கொள்முதல் செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டது. இதற்குரிய கொள்முதல் விலையும் நிர்ணயம் செய்து, அது குறித்து சங்கங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 40 ரகம் வார்ப் நூலிழை ஒரு கிலோ, 204.50 ரூபாய் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும், என, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அதன் விலை வெளிச் சந்தையில் கிலோ 220 ரூபாயாக உள்ளது.விலையில் உள்ள வித்தியாசத்தால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிலோவுக்கு 15.50 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும் உற்பத்தியை துவக்க வேண்டும் என்பதால், சில சங்கங்கள் ஒரு மாதத்துக்கு தேவையான நூலிழை மூட்டைகளுக்கு ஆர்டர் அளித்துள்ளன. கோவை மாவட்டம்சில சங்கங்கள், நூலிழைகளை கொள்முதல் செய்யாமல் உள்ளன. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் தற்போது, தலா 10 சங்கங்கள் என, 20 சங்கங்கள் மட்டும் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள உறுப்பினர்களின் கூடங்களில் உள்ள, விசைத்தறிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேட்டி, சேலை உற்பத்திக்கு குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில், கோவை மாவட்டத்தில், தலா 26 லட்சம் வேட்டி, சேலைகளும், திருப்பூர் மாவட்டத்தில், தலா, 25 லட்சம் வேட்டி மற்றும் சேலைகளும் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)