பதிவு செய்த நாள்
05 ஆக2012
23:37
சென்னை: வரும் 2016ம் ஆண்டில், நாட்டின் சில்லரை வர்த்தக துறை, 67,500 கோடி டாலராக (37.12 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, நோக்கியா இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் டீ.சிவகுமார் தெரிவித்தார்.இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:நாட்டில், விரைவாக வளர்ச்சி கண்டு வரும், முக்கிய துறைகளில் ஒன்றாக, சில்லரை வர்த்தகம் திகழ்கிறது. கடந்த 2006ம் ஆண்டில், இந்தியாவின் சில்லரை வர்த்தக துறையின் சந்தை மதிப்பு, 31 ஆயிரம் கோடி டாலராக (17.05 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. இது, சென்ற 2011ம் ஆண்டில், 47 ஆயிரம் கோடி டாலராக (25.85 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.சில்லரை வர்த்தக துறை, ஆண்டுதோறும் சராசரியாக, 7.5 சதவீதம் என்றளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, நாடு தழுவிய சில்லரை வர்த்தகத்தில், 3 சதவீத நிறுவனங்களே அமைப்பு சார்ந்தவையாகும். இது, வரும் 2016ம் ஆண்டில், 12 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல், இத்துறையின் சந்தை மதிப்பும், அவ்வாண்டில், 67,500 கோடி டாலராக (37.12 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்துறை, அதி நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றவேண்டும். சில்லறை வர்த்தக துறையின் வளர்ச்சிக்கு, மின்சாரம், வர்த்தக இடம், விற்பனை அதிகாரிகளின் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்த, தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|