மெட்ராஸ் சிமென்ட்ஸ்நிகர லாபம் ரூ.123 கோடி மெட்ராஸ் சிமென்ட்ஸ்நிகர லாபம் ரூ.123 கோடி ... வரும் செப்டம்பரில் பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வரும் செப்டம்பரில் பொது துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ...
சில்லரை வர்த்தக துறை 67,500 கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2012
23:37

சென்னை: வரும் 2016ம் ஆண்டில், நாட்டின் சில்லரை வர்த்தக துறை, 67,500 கோடி டாலராக (37.12 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, நோக்கியா இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் டீ.சிவகுமார் தெரிவித்தார்.இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:நாட்டில், விரைவாக வளர்ச்சி கண்டு வரும், முக்கிய துறைகளில் ஒன்றாக, சில்லரை வர்த்தகம் திகழ்கிறது. கடந்த 2006ம் ஆண்டில், இந்தியாவின் சில்லரை வர்த்தக துறையின் சந்தை மதிப்பு, 31 ஆயிரம் கோடி டாலராக (17.05 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. இது, சென்ற 2011ம் ஆண்டில், 47 ஆயிரம் கோடி டாலராக (25.85 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்து காணப்பட்டது.சில்லரை வர்த்தக துறை, ஆண்டுதோறும் சராசரியாக, 7.5 சதவீதம் என்றளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, நாடு தழுவிய சில்லரை வர்த்தகத்தில், 3 சதவீத நிறுவனங்களே அமைப்பு சார்ந்தவையாகும். இது, வரும் 2016ம் ஆண்டில், 12 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதேபோல், இத்துறையின் சந்தை மதிப்பும், அவ்வாண்டில், 67,500 கோடி டாலராக (37.12 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்துறை, அதி நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றவேண்டும். சில்லறை வர்த்தக துறையின் வளர்ச்சிக்கு, மின்சாரம், வர்த்தக இடம், விற்பனை அதிகாரிகளின் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்த, தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)