பதிவு செய்த நாள்
05 ஆக2012
23:40
புதுடில்லி: வரும் 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), பருத்தி பயிரிடப்படும் பரப்பளவு, 10-15 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வேளாண் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.நடப்பு 2011-12ம் பருவத்தில், 122 லட்சம் ஹெக்டேரில், பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இதன் உற்பத்தி, 3.47 கோடி பொதிகளாக (1 பொதி-170 கிலோ) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, குறைவான மழை, விலை குறைவு ஆகிய காரணங்களால், பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதன் உற்பத்தி பாதிக்கப்படாது என தெரிகிறது.உள்நாட்டு விலையுடன் ஒப்பிடும் போது, சர்வதேச அளவில், பருத்தி விலை, 4-5 சதவீதம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, இந்திய ஜவுளி துறையினர், நடப்பு பருவத்தில், 12 லட்சம் பருத்தி பொதிகளை இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|