பதிவு செய்த நாள்
05 ஆக2012
23:41
ஐதராபாத்: இந்திய வங்கித் துறை, வரும் 2019ம் ஆண்டிற்குள் "பேசல்-3' நடைமுறைக்கு மாற வேண்டும். இதனால், இந்தியாவில் உள்ள வங்கிகள், அவற்றின் மூலதன தேவைக்காக, ஒட்டு மொத்த அளவில், 1.60 - 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட வேண்டியிருக்கும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ் தெரிவித்தார்.சுவிட்சர்லாந்து கடந்த, 1988ம் ஆண்டு,சுவிட்சர்லாந்தில், பேசல் என்ற இடத்தில், உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உலகளவில்,வங்கிச் செயல்பாடுகளை சீரமைத்து ஒருங்கிணைக்கவும், வங்கி நடைமுறைகளில் உள்ள இடர்பாடுகளை சமாளிக்கும் வகையில், பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் முடிவு எடுக்கப்பட்டது.இந்த பேசல் குழுவின் பரிந்துரைப்படி, சர்வதேச அளவில், வங்கி துறையில் அவ்வப்போது மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், தற்போது, "பேசல்-3' நெறிமுறைப்படி, வரும், 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்திய வங்கிகள், அவற்றின் மூலதன இருப்பு விகிதத்தை (சி.ஏ.ஆர்.) குறைந்தபட்சம் 11.5 சதவீத அளவிற்கு உயர்த்திக் கொள்ள வேண்டும்.இடர்பாடுசி.ஏ.ஆர். விகிதத்தை, உயர்த்திக் கொள்வதன் வாயிலாக, வங்கிகள், எதிர்பாராத நிதி இடர்பாடுகளை எளிதாக சமா ளித்துக் கொள்ள முடியும். மேலும், இதனால், வங்கி வாடிக்கையாளர்களின் முதலீடுகளை பாதுகாக்க இயலும்.தற்போதை நிலவரப்படி இந்திய வங்கிகளின் மூலதன இருப்பு விகிதம், குறைந்தபட்சம் 9 சதவீத அளவிற்கு இருக்க வேண்டும். ஒரு சில வங்கிகளின், மூலதன இருப்பு விகிதம், குறைந்தபட்ச அளவை விட கூடுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், வரும் ஆண்டுகளில் வங்கிகளின் வர்த்தகம் மேலும் பல கோடியாக அதிகரிக்கும் என்பதால், அவை எதிர் கொள்ள வேண்டிய இடர்பாடுகளும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் வகையில், "பேசல்-3' விதிமுறைப்படி, இந்திய வங்கிகள், அவற்றின் மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.வங்கிகள், அவற்றின் உள்வள நிதி ஆதாரங்கள், வட்டி வருவாய் போன்றவற்றின் மூலம், அவற்றிற்கு தேவையான கூடுதல் மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்து கொள்ளலாம். அவ்வாறு, அதிகரித்து கொள்ள முடியாத வங்கிகள், கூடுதல் மூலதனத்தின் வாயிலாக, தேவையான நிதி ஆதாரத்தை திரட்டிக் கொள்ள வேண்டும். மூலதனம் இது குறித்து, ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ் கூறும்போது, "பேசல்-3' விதிமுறையை பின்பற்ற, வங்கிகளுக்கு கூடுத லாக 1.75 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில்,பெரும்பகுதியை பொதுத் துறை வங்கிகள் திரட்ட வேண்டும். ஆனால், அவை திரட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசு துணை புரிந்தால், வங்கிகள் அவற்றின் மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம்' என்று தெரிவித்தார். அதே சமயம், தனியார் வங்கிகள், கூடுதல் பங்கு மூலதனத்தை சுலபமாக உயர்த்திக் கொள்ள முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில், தனியார் வங்கிகள் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மூலதனத்தை உயர்த்திக் கொண்டுள்ளன என சுப்பாராவ் மேலும் தெரிவித்தார்.உறுதிமொழிஇந்நிலையில், வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் "பேசல்-3' நடைமுறைக்கு மாறுவதற்கான உறுதிமொழியை, இந்திய வங்கிகள் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வரும் 2019ம் ஆண்டு மார்ச் இறுதி வரை அவகாசம் உள்ளது என்றாலும், அதுவரை காத்திருக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை. கடைசி கட்டத்தில் சிக்கல் ஏற்பட்டால், அது சர்வதேச வங்கி வட்டத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.மேலும், நாடு முழுவதும் ஏ.டி.எம்.,களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ரொக்க பரிமாற்றத்தில் இருந்து மின்னணு பணப் பரிமாற்றத்திற்கு மாறவேண்டும் என @மலும் சுப்பாராவ் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|