பதிவு செய்த நாள்
06 ஆக2012
10:49
ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் கூடுதல் உடல் எடை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நொறுக்கு தீனிகளுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
யூத நாடான இஸ்ரேலில், வயது வந்தோரில் 37 சதவீதம் பேர் குண்டாக உள்ளனர். 15 சதவீதம் பேர் பரம்பரையாகவே குண்டாக உள்ளனர். இளைஞர்களில் 14 சதவீதம் பேர் உடல் பருமனுடன் காணப்படுகின்றனர். ஏழு சதவீதம் பேர் உடல் எடை அதிகமாக உள்ளவர்களாக உள்ளனர். உடல் எடை கூடியவர்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கான மருந்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது. உடல் எடை மற்றும் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளுக்கு கணிசமான வரி விதிக்கவும், சுகாதாரமான உணவு பொருட்களுக்கு மானியம் அளிக்கவும் இஸ்ரேலிய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எந்தெந்த உணவு பொருட்கள் உடல் நலனை கெடுக்கின்றன என ஆராயப்பட்டதில் குளிர்பானங்கள் மற்றும் சிப்ஸ் மற்றும் வறுவல் செய்த பொருட்கள் உடல் நலனுக்கு எதிராக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த பொருட்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வருவாயை, சுகாதாரமான பொருட்களுக்கு மானியமாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|