பதிவு செய்த நாள்
06 ஆக2012
23:39
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், சப்போட்டா, திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழ வகைகள் அதிகம் சாகுபடியாகின்றன. இறவை பாசன பகுதியில், சமீப காலமாக கொய்யா சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில், பல பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள், கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கொய்யாவை பொறுத்த வரை, பருவமழை மற்றும் சீசன் காலங்களில் முறையான நீர் மேலாண்மை இருந்தால், உற்பத்தி அதிகம் கிடைக்கும்.கொய்யா பழங்களுக்கு, உள்ளூரிலும், வெளியூரிலும் நல்ல விலை கிடைக்கிறது. விவசாயிகள் நேரடியாக சந்தையில் விற்கும் வாய்ப்பு இருப்பதால், கூடுதல் லாபம் கிடைக்கும் நிலையுள்ளது.ஆண்டுதோறும், ஜூலை மாதத்தில் இருந்து, கொய்யா அறுவடைக்கு கிடைக்கும்.தர்மபுரி மாவட்டம் முழுவதும், தற்போது, கொய்யா அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில், மா தோட்டங்களை குத்தகைக்கு எடுப்பதை போல், வியாபாரிகள், கொய்யா தோட்டங்களையும், சில ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து அறுவடை செய்து வருகின்றனர்.சீசன் காலத்தில், இதற்கு, சந்தைகளில் வரவேற்பு இருப்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் உள்ளூர் விற்பனைக்கும், வெளி மாவட்டங்களுக்கும், கொய்யாவை, விற்பனைக்கு அனுப்புகின்றனர்.தோட்டங்களில் அறுவடை செய்யப்படும் கொய்யா, நேரடியாக, கிலோ, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உழவர் சந்தையிலும் இதே விலையில், விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். சில்லரை விற்பனையில், கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|