பதிவு செய்த நாள்
06 ஆக2012
23:41
புதுடில்லி: வரும் 2013ம் ஆண்டில், நாட்டில், 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போலி மின்னணு மற்றும் வாகன பொருட்கள் புழங்கும் என "அசோசெம்' அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்த அறிக்கை விவரம்: தற்போது சட்டத்திற்கு புறம்பான வழிகளில் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மின்னணு பொருட்களும், மோட்டார் வாகன பொருட்களும் புழங்குகின்றன. கடந்த 2011-12ம் நிதியாண்டில், இவ்வகை போலி பொருட்களால், அரசுக்கு 5,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.போலி பொருட்களின் மையமாக டில்லி விளங்குகிறது. இங்கு 75 சதவீத போலி பொருட்கள் புழங்குகின்றன. நுகர்வோர் சாதனங்கள், மருந்துகள், தாவர எண்ணெய், நெய், நறுமணப் பொருட்கள், ஆடைகள், காலணிகள், வாட்சுகள், தோல் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவைகளில் போலி கள் உள்ளன.போதுமான கண்காணிப்பு அமைப்புகள் இல்லாததால் இத்தகைய போலி பொருட்களின் புழக்கம், அதிகரித்து வருகிறது. மருந்துகள், மின்னணுபொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனைக்கு "பார்கோடு' முறையை கட்டாயமாக்குவது உள்ளிட்ட நடைமுறைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்வது அவசியமாகும். இதன் மூலம் போலிகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|