பதிவு செய்த நாள்
06 ஆக2012
23:42
புதுடில்லி: நிலையான வட்டி விகிதம், மூலப்பொருட்களின் விலை குறைந்து வருவது போன்றவற்றால், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர லாபம், 24.5 சதவீதம் வளர்ச்சி காணும் என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ.,) மதிப்பீடு செய்துள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், வட்டி உயர்வு மற்றும் இறக்குமதி செலவினம் அதிகரிப்பு போன்றவற்றால், ஒட்டுமொத்த அளவில் நிறுவனங்களின் நிகர லாபம், 0.6 சதவீதம் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சியில், பெட்ரோலியம் மற்றும் வங்கித் துறைகளின் பங்களிப்பு, 43 சதவீதம் என்றளவில் உள்ளது. இதே நிதியாண்டுகளில், ஒட்டுமொத்த அளவில், நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி, 20 சதவீதத்திலிருந்து, 13.2 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, பெட்ரோலிய துறை நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி குறையும் என்றே மதிப்பீடே காரணம்.சென்ற நிதியாண்டில், இத்துறை நிறுவனங்களின் நிகர விற்பனை வளர்ச்சி, 33 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இது, நடப்பு நிதியாண்டில், 9.6 சதவீதம் என்ற குறைந்தளவில் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நிதியாண்டுகளில், வங்கித் துறையின் வருவாய் வளர்ச்சி, 33.7 சதவீதத்திலிருந்து, 16.4 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|