இந்திய நிறுவனங்களின் லாபம் 25 சதவீதம் உயரும் இந்திய நிறுவனங்களின் லாபம் 25 சதவீதம் உயரும் ... "செயில்' நிறுவனத்தின் உருக்கு  உற்பத்தி 4 சதவீதம் உயர்வு "செயில்' நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 4 சதவீதம் உயர்வு ...
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற கொள்கைகளில் சீர்திருத்தம்: சிதம்பரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2012
23:43

புதுடில்லி: முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர், மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், நேற்று முதன் முதலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:உற்பத்தியும், ஏற்றுமதியும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.இந்த இரண்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.பணவீக்கம்நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும். விரைவில், நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்படும். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், அரசு கொள்கைளில் மாற்றம் செய்யப்படும்.உணவுப் பொருள்களின் கையிருப்பை பயன்படுத்தி, அதன் விலையை கட்டுக்குள் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும், உணவுப் பொருள் இறக்குமதியை அதிகரிப்பதன் மூலம், பற்றாக்குறை சமாளிக்கப்படும். அடுத்த ஒரு சில வாரங்களில், பரஸ்பர நிதி மற்றும் காப்பீட்டு துறைகளில் முதலீடுகளை ஈர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். அடிப்படை கட்டமைப்பு பெரிய திட்டங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக 1,000 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான திட்டங்களை கண்காணிக்கும் வகையில் "முதலீட்டு கண்காணிப்பு திட்டம்' என்ற அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக, நிதியமைச்சரை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் டீ.சுப்பாராவ், செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து அமைச்சருடன் விவாதித்தாக தெரிவித்தார். விரைவில் மீண்டும் அமைச்சருடன் விரிவாக பேச உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)