பதிவு செய்த நாள்
06 ஆக2012
23:45
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான, திங்கள் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிருஷ்ணா கோதாவரி படுகையில் "டீ-6' எண்ணெய் வயல்களின் உற்பத்தி திறனை அதிகரித்து கொள்ள ஒப்புதல் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டால் இதன் பங்கின் விலை உயர்ந்தது. இது பங்கு வர்த்தகத்தின் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது. இந்நிலையில், கிரீஸ் நாட்டு கடன் நெருக்கடிக்கு, தீர்வு காணும் வகையிலான, சலுகை திட்டங்கள் குறித்த சாதகமான செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில்,பொறியியல், எண்ணெய், எரிவாயு, வங்கி, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், நுகர்பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 215.03 புள்ளிகள் அதிகரித்து, 17,412.96 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,451.53 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,313.05 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 66.85 புள்ளிகள் உயர்ந்து, 5,282.55 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,293.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,260.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|