சென்னை வர்த்தக மையத்தில் ஆயத்த ஆடைகள் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஆயத்த ஆடைகள் கண்காட்சி ... பருவமழை தாமதத்தால் கரீப் பருவ சாகுபடி பரப்பளவு குறைந்தது பருவமழை தாமதத்தால் கரீப் பருவ சாகுபடி பரப்பளவு குறைந்தது ...
நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி 5 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2012
23:43

புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், நாட்டின் புண்ணாக்கு ஏற்றுமதி, 13.35 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட (14.03 லட்சம் டன்), 5 சதவீதம் குறைவாகும் என, இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், புண்ணாக்கு ஏற்றுமதி, 2,74,635 டன்னாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (2,81,879 டன்) விட,3 சதவீதம் குறைவாகும்.நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில், நம் நாட்டிலிருந்து ஈரான் மிகவும் அதிகமாக,அதாவது, 4,51,915 டன் புண்ணாக்கை இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 86,212 டன்னாக இருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.ஈரானை தொடர்ந்து, தென் கொரியா, வியட்நாம், ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகள், நம் நாட்டிலிருந்து அதிகளவில் புண்ணாக்கை இறக்குமதி செய்து கொள்கின்றன. ஏற்றுமதி செய்யப்படும் புண்ணாக்கு வகைகள், வெளிநாடுகளில் தீவனமாக பயன்படுத்தப்படுகின்றன.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின்புண்ணாக்கு ஏற்றுமதி அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 9 சதவீதம் அதிகரித்து, 50.71 லட்சம் டன்னிலிருந்து, 55.20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)