பருவமழை தாமதத்தால் கரீப் பருவ சாகுபடி பரப்பளவு குறைந்தது பருவமழை தாமதத்தால் கரீப் பருவ சாகுபடி பரப்பளவு குறைந்தது ... சுங்க வரி மற்றும் விலை உயர்வால்...இந்தியாவின் தங்கம் இறக்குமதி 350 டன்னாக சரிவு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - சுங்க வரி மற்றும் விலை உயர்வால்...இந்தியாவின் தங்கம் இறக்குமதி 350 டன்னாக ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்க்கரை விலை கிலோ ரூ.41 ஆக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2012
23:45

புதுடில்லி: ஒரே மாதத்தில், சர்க்கரை விலை, கிலோவுக்கு, 10 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து, 41 ரூபாயை எட்டி யுள்ளது.ஏற்றுமதிவெளிநாடுகளுக்கு, 18 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாலும், பருவமழை குறைவால், சர்க்கரை உற்பத்தி சரியும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், அதன் விலை உயர்ந்து வருகிறது.தமிழகத்தில், மொத்த விற்பனை சந்தையில் கடந்த மாதம் ஒரு குவிண்டால் சர்க்கரை, 2,900 ரூபாய்க்கு விற்றது. சில்லரை விற்பனையில், ஒரு கிலோ 31 ரூபாய்க்குவிற்பனையானது.இது, கிடு..கிடு..வென உயர்ந்து, தற்போது, இதுவரை இல்லாத அளவாக, ஒரு கிலோ சர்க்கரை விலை, 41 ரூபாயை எட்டியுள்ளது.எனினும், டில்லி மொத்த விற்பனை சந்தையில், சென்ற திங்களன்று, ஒரு குவிண்டால் சர்க்கரை விலை, 100 ரூபாய் உயர்ந்து, 4,000 ரூபாயாக இருந்தது.மொத்த விற்பனைஅதாவது, ஒரே மாதத்தில், மொத்த விற்பனையில் குவிண்டாலுக்கு 1,100 ரூபாயும், சில்லரை விற்பனையில் கிலோவுக்கு 11 ரூபாயும் உயர்ந்துள்ளது.ஆலைகளின் சர்க்கரை அளிப்பு குறைந்துள்ளதும், பதுக்கலும், சர்க்கரை விலை உயர காரணம் என்று கூறப்படுகிறது.சந்தையில், "பாக்கெட்டில்' அடைக்கப்பட்ட"பிராண்டட்' சர்க்கரை ஒரு கிலோ 45லிருந்து 48 ரூபாய் வரை விற்கப்படுகிறது.விதிமுறைசர்க்கரை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, சென்ற மாதம் வெளிச்சந்தையில் கூடுதலாக, 2.66 லட்சம் டன் சர்க்கரை வினியோகத்திற்கு அனுமதித்தது. மேலும், ஜூன்-செப் வரையிலான காலாண்டில், 45 லட்சம் டன் சர்க்கரையை வெளிச் சந்தையில் விற்பனை செய்வதற்கானவிதிமுறைகளையும் தளர்த்தியது.இதன்படி, சர்க்கரை ஆலைகள், அவற்றுக்கான ஒதுக்கீட்டில் 30 சதவீதத்தை ஜூலையிலும், 70 சதவீதத்தை ஜூலை மற்றும் ஆகஸ்டிலும், 30 சதவீதத்தை செப்டம்பர் மாதத்திலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)