சுங்க வரி மற்றும் விலை உயர்வால்...இந்தியாவின் தங்கம் இறக்குமதி 350 டன்னாக சரிவு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சுங்க வரி மற்றும் விலை உயர்வால்...இந்தியாவின் தங்கம் இறக்குமதி 350 டன்னாக ... ... வாழைத்தார் வரத்து குறைவு; விலை அதிகரிப்பு வாழைத்தார் வரத்து குறைவு; விலை அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 189 புள்ளிகள் உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2012
23:46

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்க் கிழமையன்றும் மிக நன்றாக இருந்தது. அன்னிய முதலீட்டை அதிகளவில் ஈர்க்கும் வகையில், வரிக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படும் மற்றும் வட்டி விகிதங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற, மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் அறிவிப்பால், பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.இந்நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கியின் கடன் பத்திரங்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு, ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம்ஏற்றத்துடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 188.82 புள்ளிகள் உயர்ந்து, 17,601.78 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,641.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,417.92 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்தும், எட்டு நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 54.15 புள்ளிகள் அதிகரித்து, 5,336.70 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,350.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்ச மாக, 5,281.65 புள்ளிகள் வரையிலும் சென்றது.


Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)