சுங்க வரி மற்றும் விலை உயர்வால்...இந்தியாவின் தங்கம் இறக்குமதி 350 டன்னாக சரிவு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சுங்க வரி மற்றும் விலை உயர்வால்...இந்தியாவின் தங்கம் இறக்குமதி 350 டன்னாக ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு ...
வாழைத்தார் வரத்து குறைவு; விலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2012
11:26

மேட்டுப்பாளையம்: பருவமழை இல்லாதது, சூறாவளி காற்றில் வாழை சேதமடைந்தது உள்ளிட்ட காரணங்களால், வாழைத்தாரின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில், அதிகளவில் வாழை பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும், ரம்ஜான், ஓணம் பண்டிகையின்போது, வாழைத்தாரின் விலை அதிகரிக்கும். ஆனால், இந்தாண்டு பண்டிகை காலம் துவங்கும் முன்பே, விலை அதிகரித்துள்ளது. இது குறித்து, மேட்டுப்பாளையம் வாழைக்காய் மண்டி விற்பனை மேலாளர் சின்ராஜ் கூறியதாவது: பண்டிகைக் காலங்களில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்தாண்டு பருவ மழை பொய்த்ததாலும், கடந்த மே மாதம், இப்பகுதியில் அடித்த சூறாவளியாலும், வாழைகள் அதிகளவில் சேதமடைந்தன.
இதனால், மண்டிக்கு பழம் வரத்து குறைந்து, விலையும் அதிகரித்துள்ளது. பண்டிகைக் காலம் துவங்கும் முன், கடந்த மாதமே, வாழைத்தாரின் விலை அதிகரித்து விட்டது. ஒரு கிலோ, 36 ரூபாய்க்கு விற்கப்பட்ட கதளி, 45 ரூபாயாகவும், நேந்திரன், 28ல் இருந்து 32க்கும், ரோபாஸ்டா ஒரு தார், 375ல் இருந்து, 475க்கும், பூவன், 378ல் இருந்து, 460க்கும், செவ்வாழை, 1,000த்தில் இருந்து, 1,100க்கும், ரஸ்தாளி, 250ல் இருந்து 300க்கும், தேன்வாழை 375ல் இருந்து 480 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. ஒரு தாரில் குறைந்தது, 100 முதல் 150 வரை, பழங்கள் இருக்கும். இதன் அடிப்படையில், சில்லரை வியாபாரிகள், ஒரு பழத்தின் விலையை நிர்ணயித்து விற்கின்றனர். இவ்வாறு, சின்ராஜ் தெரிவித்தார். ஒரு பூவன் பழம் இரண்டு ரூபாய்க்கு, சில்லரைக் கடைகளில் விற்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)