பதிவு செய்த நாள்
09 ஆக2012
00:08
புதுடில்லி:சென்ற ஜூலை மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 5.25 லட்சம் என்றளவில் அதிகரித்துள்ளது. இது, கடந்த 2011ம் ஆண்டின் இதே மாதத்தில், வருகை தந்த பயணிகள் எண்ணிக்கையை (5.14 லட்சம் பேர்) விட, 2.1 சதவீதம் அதிகமாகும்.
இதே மாதங்களில், சுற்றுலா பயணிகள் வாயிலான அன்னியச் செலாவணி வருவாய், 17.9 சதவீதம் வளர்ச்சிகண்டு, 7,116 கோடியிலிருந்து, 8,389 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டின், ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாத காலத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த பயணிகள் எண்ணிக்கை, 37.62 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில் வருகை தந்த பயணிகள் எண்ணிக்கையை விட, (35.29 லட்சம் பேர்) 6.6 சதவீதம் அதிகமாகும்.மதிப்பீட்டு காலத்தில், சுற்றுலா பயணிகள் வாயிலான வருவாய், 23.3 சதவீதம் வளர்ச்சிகண்டு, 42,279 கோடியிலிருந்து, 52,149 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|