பதிவு செய்த நாள்
09 ஆக2012
00:19
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, நான்கு மாத காலத்தில், ரயில்வே துறையின் வருவாய், 39,632 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் வசூலான தொகையை விட, (33,061 கோடி ரூபாய்) 19.87 சதவீதம் அதிகம் என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், சரக்கு கையாண்டதன் வாயிலான வருவாய், 24 சதவீதம் வளர்ச்சிகண்டு, 22,272 கோடி ரூபாயிலிருந்து, 27,617 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பயணிகள் வாயிலான வருவாய், 11.99 சதவீதம் வளர்ச்சியடைந்து, 9,215 கோடி ரூபாயிலிருந்து, 10,320 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதர ரயில்பெட்டிகள் வாயிலான வருவாய், 10.57 சதவீதம் அதிகரித்து, 920 கோடி ரூபாயிலிருந்து, 1,017 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில், ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் எண்ணிக்கை, 284 கோடியாக அதிகரித்துள்ளது. புறநகர் பகுதிகளில் பயணித்தோர் எண்ணிக்கை, 146 கோடி என்றளவிலும், புறநகர் சாராத பகுதிகளிலிருந்து ரயில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, 138 கோடி என்றளவிலும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|