பதிவு செய்த நாள்
09 ஆக2012
00:21
புதுடில்லி:நடப்பு 2012-13ம் பருவத்தில், நாட்டின் சணல் உற்பத்தி, 90 லட்சம் பொதிகளாக (1 பொதி-332.5 கிலோ) குறையும் என, தேசிய சணல் வாரியம் தெரிவித்துள்ளது.சணல் உற்பத்தியாகும் மாநிலங்களில், மழைப்பொழிவு குறைந்துள்ளதால், நடப்பு பருவத்தில், இதன் உற்பத்தி, கடந்த பருவத்தை (102 லட்சம் பொதிகள்) விட,12 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய வேளாண் அமைச்சகம், வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், நடப்பு கரீப் பருவத்தில், சணல் பயிரிடும் பரப்பளவு, 8.40 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தில், 8.92 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
இந்தியாவில், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திரா ஆகிய ஏழு மாநிலங்களில், சணல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.உள்நாட்டில் உற்பத்தியாகும் சணல், மிக அதிகளவில் சணல் சாக்கு தயாரிக்க பயன்படுத்தி கொள்ளப்படுகிறது. இத்துறையில், 40 லட்சம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மத்திய ஜவுளி அமைச்சகம், சணல் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை, உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|