சிண்டிகேட் பேங்க்புதிய பொது மேலாளர்சிண்டிகேட் பேங்க்புதிய பொது மேலாளர் ... ஐரோப்பிய நாடுகளுக்கான வர்த்தகம் உயர்வு ஐரோப்பிய நாடுகளுக்கான வர்த்தகம் உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' சரிவு, "நிப்டி' உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2012
00:23

மும்பை:நாட்டின் பங்குச் சந்தை புதன்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.இந்நிலையில், ஐரோப்பாவில் ஐ.என்.ஜி குழுமம் உள்ளிட்ட ஒரு சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சரிவடைந்து போயின. இது, சந்தை மதிப்பீட்டை விட குறைவு என்ற அடிப்படையில் அந்நாடுகளில் பங்கு வர்த்தகம் மந்தமடைந் தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
இருப்பினும், சர்வதேச பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய வங்கிகள் நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற நிலைப்பாட்டால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்று நடை பெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், நுகர் பொருட்கள், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், ரியல் எஸ்டேட், பொறியியல், வங்கி, தகவல் தொழில் நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 1.22 புள்ளிகள் குறைந்து, 17,600.56 புள்ளிகளில் நிலைபெற்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 22 நிறுவனப் பங்குகளின் விலை, உயர்ந்தும், எட்டு நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், "நிப்டி' 1.30 புள்ளிகள் உயர்ந்து, 5,338.00 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,377.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,331.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)