நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில்... நிறுவன கையகப்படுத்தல் மதிப்பு 20 சதவீதம் சரிவுநடப்பு ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில்... நிறுவன கையகப்படுத்தல் மதிப்பு 20 ... ... தங்கம் விலை உயர்ந்தது தங்கம் விலை உயர்ந்தது ...
7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டம்: மத்திய அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2012
10:35

புதுடில்லி: வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று கோடி பேருக்கு, 7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, சுதந்திர தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. 90 கோடி பேருக்கு மேல், மொபைல் போன் வைத்துள்ளனர். தினமும் மொபைல் போன் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களில், மொபைல் போன் என்பது இன்னமும், 'பகல் கனவாக'வே உள்ளது.
புதிய திட்டம்: இந்நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு, மொபைல் போனை இலவசமாக வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தப் புதிய திட்டத்திற்கு, 'ஒவ்வொரு கையிலும் ஒரு மொபைல் போன்' என, பெயரிடவும் தீர்மானித்துள்ளது. நாட்டில், 60 லட்சம் குடும்பங்கள், வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு குடும்பத்தில் நான்கு முதல் ஐந்து பேர் இருப்பதாக கணக்கிட்டால், மூன்று கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் இலவசமாக மொபைல் போன் வழங்கப்படும். வெறுமனே மொபைல் போனை மட்டும் வழங்காமல், ஒவ்வொரு மாதமும் 200 உள்ளூர் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும்.
திட்ட செலவு: இந்தத் திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க, மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் திட்டக் கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனேகமாக வரும் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று இது தொடர்பான அறிவிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம் பெறும் திட்டங்கள் குறித்து, பிரதமர் அலுவலக வட்டாரங்கள் இன்னமும் உறுதி செய்யவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)