தங்கம் விலை உயர்ந்ததுதங்கம் விலை உயர்ந்தது ... தொழில் துறை உற்பத்தியில் சரிவு ஏமாற்றம் அளிக்கிறது: மான்டேக் சிங் தொழில் துறை உற்பத்தியில் சரிவு ஏமாற்றம் அளிக்கிறது: மான்டேக் சிங் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வெளிநாடு செல்லும் யமஹா ஆர்15 பைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2012
13:44

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இருசக்கர வாகனங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது புதிதல்ல. 2012 நிதியாண்டில், இந்தியாவில் இருந்து, 19.40 லட்சம் இரு சக்கர வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2011 நிதியாண்டை ஒப்பிடுகையில், இது 27.13 சதவீத வளர்ச்சி. 2011 நிதியாண்டில், 15.30 லட்சம் இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ்., மோட்டார் ஆகிய நிறுவனங்கள், இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்வதில், முன்னணியில் உள்ளன. அந்த வகையில், வெளிநாடுகளுக்கு இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்வதில், நான்காவது இடத்தில், யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. இது ஜப்பானின் துணை நிறுவனமாகும். இருந்தாலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், யமஹா ஆர்15 மாடல் பைக்கை, ஜப்பானில் அறிமுகப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில், ஆர்15 பைக் சோதனை ஓட்டம் சிறப்பாக அமைந்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யமஹா நிறுவனத்தின் பைக்குகள், சட்டீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஜப்பானில், ஆண்டுதோறும், 4 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இதில், பெரும்பான்மையானவை, 50 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் தான். எனினும், விலை அதிகமான பைக்குகள் மற்றும் ரேஸ் பைக்குகளுக்கு, ஜப்பானில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை கருத்தில் கொண்டே, ஆர்15 பைக் சோதனை ஓட்டம் அங்கு நடத்தப்பட்டது. இது நல்ல படியாக முடிந்ததால், விரைவில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், யமஹா ஆர்15 மாடல் பைக், ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பைக், இந்தியாவில் ரூ.1.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானில் இந்த பைக்கின் விலை ரூ.2.45 லட்சம் என்ற அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)