ஏர் இந்தியா விமானநேரம் மாற்றம்:நிலைய மேலாளர் தகவல்ஏர் இந்தியா விமானநேரம் மாற்றம்:நிலைய மேலாளர் தகவல் ... விமான சேவை நிறுவனங்கள் வங்கிகளுக்கு ரூ.40,621 கோடி நிலுவை விமான சேவை நிறுவனங்கள் வங்கிகளுக்கு ரூ.40,621 கோடி நிலுவை ...
2020க்குள் அனைத்து மொபைலிலும் 'ஆன்ட்ராய்டு' வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2012
14:09

ராமநாதபுரம்:''உலகளவில் 2020க்குள் அனைத்து மொபைல்போன்களில் 'ஆன்ட்ராய்டு' வசதி ஏற்படுத்தப்படும்,'' என மலேசிய அறிவியல் பல்கலை 'ஐபிவி6' மையத்தின் துணை இயக்குனர் செல்வகுமார் மாணிக்கம் கூறினார்.ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில், 'ஆன்ட்ராய்டில் நவீன பயன்பாடான ஐபிவி 6' குறித்து தேசிய அளவிலான பயிற்சி முகாம் நடக்கிறது. மலேசிய அறிவியல் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் ஹேமனந்தன், கெல்வின் காங், கிறிஸ்டோபர் ஆகியோர், மாணவர்களுக்கு, மொபைல்போனில் ஆன்ட்ராய்டு பயன்பாட்டின், நவீன செயல்பாடுகளை உருவாக்குவது குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
இக்குழுவின் தலைவர் செல்வகுமார் மாணிக்கம் கூறியதாவது: உலகளவில் தற்போது மொபைல் போன்களில் 62 சதவீதம் மட்டுமே ஆன்ட்ராய்டு பயன்பாடு உள்ளது. விலை உயர்ந்த மொபைல் போன்களில் மட்டுமே இந்த வசதியை ஏற்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. ஆன்ட்ராய்டில் புதிய சாப்ட்வேர் கண்டுபிடித்து, விளையாட்டு மற்றும் மனதில் தோன்றும் கண்டுபிடிப்புகளை எப்படி உருவாக்குவது, என்பது குறித்து, இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இந்தியாவில் முதன்முறையாக வழங்கப்பட்டு வரும் இந்த பயிற்சியில் 85 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர். 2020க்குள் அனைத்து மொபைல் போன்களிலும் ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
மேலும் ஆன்ட்ராய்டு ஆராய்ச்சி மூலம் வீடுகளில் பிரிட்ஜ், பேன், எலக்ட்ரிக் பொருள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியிலும் வெற்றி கிடைத்துள்ளது. விரைவில் சாதாரண வீடுகளில் கூட ஆன்ட்ராய்டு மூலம் பிரிட்ஜ், ஏசி போன்றவற்றை வெளியிலிருந்து இயக்கும் நிலை வந்துவிடும், என்றார். கல்லூரி முதல்வர் மாரிமுத்து உடன் இருந்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)