பதிவு செய்த நாள்
11 ஆக2012
00:00
புதுடில்லி:இந்திய விமானச் சேவை நிறுவனங்கள், கடந்த ஜூன் மாத நிலவரப்படி, வங்கிகளுக்கு, 40,621 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பார்லிமென்டில் தெரிவித்தார்.கடந்த, 2009-10ம் நிதியாண்டிலிருந்து, நடப்பு 2012ம் ஆண்டு, ஜூன் 30ம் தேதி வரையிலுமாக, விமானச் சேவை நிறுவனங்களுக்கு, வங்கிகள், 47,056 கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளன. வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு மட்டும், 5,000 கோடி ரூபாய்க்கும் மேலாக, விமானச் சேவை நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ளன.
கிங்பிஷர் உள்ளிட்ட பல விமானச் சேவை நிறுவனங்கள், நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இதன் காரணமாகவே, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடனை, இந்நிறுவனங்களால், உரிய காலத்தில் திரும்ப செலுத்த முடியவில்லை என தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|