பதிவு செய்த நாள்
11 ஆக2012
00:01
புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 33.81 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே ஆறு மாத காலத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (35.83 கோடி கிலோ) விட, 6 சதவீதம் குறைவாகும் என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், வட மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 6 சதவீதம் சரிவடைந்து, 23.62 கோடி கிலோவிலிருந்து, 22.27 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தென் மாநிலங்களின் தேயிலை உற்பத்தி, 6 சதவீதம் குறைந்து, 12.21 கோடி கிலோவிலிருந்து, 11.53 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.நடப்பாண்டு, மே மாதம் வரையிலான ஐந்து மாத காலத்தில், தேயிலை உற்பத்தி தொடர்ந்து சரிவடைந்து காணப்பட்டது. இந்நிலையில், சென்ற ஜூன் மாதம், இதன் உற்பத்தி, 7 சதவீதம் உயர்ந்து, 11.47 கோடி கிலோவிலிருந்து, 12.22 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 98.83 கோடி கிலோ என்றளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், நடப்பு 2012ம் முழு ஆண்டில், இதன் உற்பத்தி, 95 கோடி கிலோவாக குறையும் என, ஐ.சி.ஆர்.ஏ. மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி என்ற தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|