பதிவு செய்த நாள்
11 ஆக2012
00:02
மும்பை:பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, சென்ற ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 3,752 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, (1,584 கோடி ரூபாய்) 137 சதவீதம் அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 16.89 சதவீதம் வளர்ச்சி கண்டு, 27,732 கோடி ரூபாயிலிருந்து, 32,415 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருவாய், 14.63 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,699 கோடி ரூபாயிலிருந்து, 11,119 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கியின், நிகர வசூலாகாத கடன், 1.61 சதவீதத்திலிருந்து, 2.22 சதவீதமாக உயர்ந்து, 12,435 கோடி ரூபாயிலிருந்து, 20,324 கோடி ரூபாயாகவும், மொத்த வசூலாகாத கடன், 3.52 சதவீதத்திலிருந்து, 4.99 சதவீதமாக அதிகரித்து, 27,768 கோடி ரூபாயிலிருந்து, 47,156 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இவ்வங்கியின் ஒட்டு மொத்த நிகர லாபம், 4,875 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, (2,512 கோடி ரூபாய்) 94 சதவீதம் அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் ஒட்டுமொத்த வருவாய், 39,126 கோடி ரூபாயிலிருந்து, 46,839 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|