பதிவு செய்த நாள்
11 ஆக2012
00:03
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான, மூடிஸ், இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சியை குறைத்து மறுமதிப்பீடு செய்தது மற்றும் சீனாவின் தொழில் வளர்ச்சி சரிவடைந்தது போன்ற தகவல்களால், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தகவல்தொழில்நுட்பம், நுகர்பொருள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம், வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 3.13 புள்ளிகள் குறைந்து, 17,557.74 புள்ளிகளில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,590.61 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,471.37 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவன பங்குகளின் விலை சரிவடைந்தும், 13 நிறுவன பங்குகளின் விலை, உயர்ந்தும் காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி', 2.55 புள்ளிகள் குறைந்து, 5,320.40 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,330.10 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,294.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|