பதிவு செய்த நாள்
12 ஆக2012
00:14
சேலம்:மாதுளை சீஸன் துவங்கி விட்டதால், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாதுளைகள், சேலத்தில் விற்பனைக்காக குவியத் தொடங்கியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் துவங்கியதும், மாதுளை சீஸனும் களை கட்டி விடும். ரத்த சுத்திகரிப்புக்கும், சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், மாதுளை பழங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு, மாதுளை வரத்து முன்னதாகவே துவங்கி விட்டது.பெங்களூரு:மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி, ஜத்து, பண்டரிப்பூர், புனே, மினிராஜா, கோலாப்பூர், சோலாப்பூர் ஆகிய பகுதிகளை சுற்றி விளையும் மாதுளைகள், பெங்களூரு, சேலம் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.சேலத்துக்கு, தினமும் 10 டன் மாதுளை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து, ஆத்தூர், சங்ககிரி, கள்ளக்குறிச்சி, ஓமலூர், வாழப்பாடி, விழுப்புரம் உட்பட பல்வேறு இடங்களுக்கு வேன் மற்றும் லாரிகள் மூலம் பெட்டிகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, ஒரு கிலோ மாதுளை, 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தற்போது, ஒரு கிலோ மாதுளை, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆடி பெருக்கு விழாவில் துவங்கி, நவராத்திரி, ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் வரை தொடர்ந்து பண்டிகைகள் வரவுள்ளதால், மாதுளையின் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்லும்.புத்துணர்ச்சி:பெரிய வகை மாதுளை ஒரு கிலோ, 70- 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய வகை மாதுளை கிலோ, 30 ரூபாய்க்கும், சாதாரண வகை மாதுளை கிலோ, 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாதுளைகளே, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.மாதுளையில் உள்ள முத்துக்களை அப்படியே சாப்பிடலாம். சிலர், அதில் சர்க்கரையை சேர்த்து சாப்பிடுகின்றனர். மாதுளை ஜூஸ் குடித்தால் புத்துணர்ச்சி ஏற்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|