பதிவு செய்த நாள்
14 ஆக2012
13:54
புதுடில்லி: நாட்டின் பணவீக்கம் 6.87 சதவீதமாக குறைந்து இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு பணவீக்கம் மற்றும் உணவு பணவீக்கத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த ஜூன் மாதத்தில் 7.25 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.87 சதவீதமாக குறைந்து இருக்கிறது. கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் ஜூலை மாத பணவீக்கம் 9.36 சதவீதமாக இருந்தது. அதேப்போல உணவுக்கான பணவீக்கமும் 10.81 சதவீதத்தில் இருந்து 10.06 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
பரவலாக பேப்பர், சிமெண்ட், ஜவுளி உள்ளிட்ட தொழில்களுக்கான மூலப்பொருள் விலை உயர்ந்துள்ளது. உணவு பொருட்களை பொருத்தமட்டில் உருளைகிழங்கு விலை கனிசமாக உயர்ந்துள்ளது. இதேப்போல் முட்டை, பால், மாமிசம், மீன் மற்றும் இதர காய்கறிகளின் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது.
இதனிடையே நடப்பாண்டில் பருவமழை பொய்த்து போனதால் போதிய உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கலக்கத்தில் இருந்த நிலையில் ஜூலை மாத பணவீக்கம் குறைந்து இருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் காலையில் சரிவுடன் இருந்த பங்குசந்தையில் மதியம் 1 மணிக்கு மேல் உயர்வுடன் காணப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|