பதிவு செய்த நாள்
14 ஆக2012
17:06
புதுடில்லி : ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எல்ன்ட்ரா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு எலன்ட்ரா செடான் காரின் விற்பனையை ஹூண்டாய் நிறுவனம் நிறுத்தியது. இந்நிலையில் அந்தகாரில் சில மாற்றங்கள், புது டிசைன்களை அமைத்து புதிய வடிவில் எலன்ட்ரா காரை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதற்கான அறிமுக விழா நேற்று நடந்தது.
ஹூண்டாயின் எலன்ட்ரா கார் பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களிலும் கிடைக்கிறது. 149.5 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 128 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா விற்பனைக்கு வந்துள்ளது. எலன்ட்ராவின் பெட்ரோல் ரக கார்கள் ரூ.12.50 லட்சத்தில் இருந்து, 14.75 லட்சம் வரை கிடைக்கிறது. அதேப்போல் டீசல் கார்கள் ரூ.12.91 லட்சத்தில் இருந்து ரூ.15.85 லட்சம் விலையில் கிடைக்கிறது. கறுப்பு, சில்வர், வெள்ளை உள்ளிட்ட ஆறு வண்ணங்களில் புதிய எலன்ட்ராவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும், கோகோ பிளாக் மற்றும் பியேஜ் இரட்டை வண்ண இன்டிரியருடன் எலன்ட்ரா கிடைக்கும். அசத்தலான, கவர்ச்சியான தோற்றம் கொண்ட புதிய ப்ளூயிடிக் எலன்ட்ரா நிச்சயம் இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடம் வகிக்கும் என ஹூண்டாய் நிறுவனம் நம்புகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|