பதிவு செய்த நாள்
14 ஆக2012
17:06
மும்பை: நாட்டின் பணவீக்கம் குறைந்ததால் காலையில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் மாலையில் உயர்வுடன் முடிந்தது. ஜூலை மாதத்திற்கான பணவீக்கத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதில் பணவீக்கம் 7.25 சதவீத்தில் இருந்து 6.87 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதேப்போல உணவுக்கான பணவீக்கமும் 10.81 சதவீதத்தில் இருந்து 10.06 சதவீதமாக குறைந்தது. இதனால் பங்குசந்தைகள் இன்று மதியத்திற்கு பிறகு ஏற்றம் கண்டன. மாலை வர்த்தக நேர முடிவின்போது, மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 94.75 புள்ளிகள் உயர்ந்து 17,728.20 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 32.45 புள்ளிகள் உயர்ந்து 5,380.35 புள்ளிகளாகவும் இருந்தது. இன்றைய பங்குசந்தையில் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஜூண்டால், ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், சன் பார்மா பங்குவிலை சரிந்தும் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|