ஏர்-இந்தியா வேலை நிறுத்த போராட்டம் ரூ.600 கோடி இழப்புஏர்-இந்தியா வேலை நிறுத்த போராட்டம் ரூ.600 கோடி இழப்பு ... பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரியும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரியும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வாழை இலை விலை கிடுகிடு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2012
00:37

சேலம்சேலத்தில், ஆடிக் காற்று அதிவேகத்தில் வீசுவதால், வாழை இலைகள் கிழிந்து சேதமாகியுள்ளன. இதனால், வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில், தலைவாசல், வீரகனூர், நல்லூர், தெடாவூர், கெங்கவல்லி, கூடமலை, செந்தாரப்பட்டி, கொண்டையம் பள்ளி,தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை, கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில், 1,500 ஏக்கருக்கு மேல், வாழை பயிரிடப்பட்டு வருகிறது.
வாழை தார்இப்பகுதிகளில் விளையும் வாழைப் பழம், மிகுந்து சுவையுடன் உள்ளதால், வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், திருச்சி, தஞ்சாவூர், கச்சிராப்பாளையம், உறையூர், பெரம்பலூர் வெண்கலம், தழுதலை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தலைவாசல், ஆத்தூர் வாழைத் தார் கமிஷன் மண்டி, தினசரி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தைகளுக்கு வாழைத் தார்கள் விற்பனைக்கு வருகின்றன.
பூவன் வாழை, தேன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், மோரீஸ் எனும் திசு வாழை போன்ற பல்வேறு வாழை ரகங்கள் சந்தைகளுக்கு வருகின்றன. இந்நிலையில், கோவில் திருவிழா நடக்கும் ஆடி மாதத்தில், சுழன்றடிக்கும் சூறாவளி காற்று காரணமாக, வாழைத்தார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், இவற்றின் வரத்து குறைந்து, விலையும் அதிகரித்து உள்ளது.
இதன்படி, பூவன் தார் தலா, 350 முதல், 400 ரூபாய்க்கும், மோரீஸ், 400 ரூபாய்க்கும், ரஸ்தாளி, 450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கற்பூரவல்லி 250 ரூபாய்க்கும், செவ்வாழை 550 ரூபாய் என்ற அளவிலும் விலை உயர்ந்துள்ளது.
ஆடி மாதம்ஆடி மாதக் காற்றில், வாழை இலைகள் கிழிந்ததால், வாழை இலைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், ஓட்டல் உள்ளிட்டவைகளுக்கு விற்கப்படும் வாழை இலை விலை, தலா, 1.50 ரூபாயில் இருந்து, மூன்று ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து, ஆத்தூர் வாழை இலை வியாபாரி கணேசன் கூறியதாவதுதிருச்சி, தஞ்சாவூர், திருவையாறு மற்றும் ஆத்தூர் பகுதிகளில் இருந்து, வாழை இலைகள் விற்பனைக்கு வருகின்றன. பூவன் ரக வாழை இலை, ஓட்டல் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகிறது. தற் போது, ஆடிக் காற்று,கடுமையான வெயில் மற்றும் பாசன வசதி இல்லாததாலும், வாழை இலைகள் கிழிந்து வருவதாலும், வாழை இலை வரத்து குறைந்து விட்டது.
பாசன வசதிதற்போது, 100 இலை கொண்ட ஒரு கட்டை, 600 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். இதில், சாப்பாடு இலை தலா மூன்று ரூபாய்க்கும், டிபன் இலை, 2.50 ரூபாய்க்கும், பெரிய இலை, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில், வாழைத் தார், வாழை இலை உற்பத்தி இருக்கும்.வாழை பயிர்களுக்கு போதிய பாசன வசதி இல்லாததால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளது. இவ்வாறு கணேசன் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)