பதிவு செய்த நாள்
15 ஆக2012
00:37
சேலம்சேலத்தில், ஆடிக் காற்று அதிவேகத்தில் வீசுவதால், வாழை இலைகள் கிழிந்து சேதமாகியுள்ளன. இதனால், வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில், தலைவாசல், வீரகனூர், நல்லூர், தெடாவூர், கெங்கவல்லி, கூடமலை, செந்தாரப்பட்டி, கொண்டையம் பள்ளி,தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், கல்வராயன்மலை, கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில், 1,500 ஏக்கருக்கு மேல், வாழை பயிரிடப்பட்டு வருகிறது.
வாழை தார்இப்பகுதிகளில் விளையும் வாழைப் பழம், மிகுந்து சுவையுடன் உள்ளதால், வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், திருச்சி, தஞ்சாவூர், கச்சிராப்பாளையம், உறையூர், பெரம்பலூர் வெண்கலம், தழுதலை, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தலைவாசல், ஆத்தூர் வாழைத் தார் கமிஷன் மண்டி, தினசரி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தைகளுக்கு வாழைத் தார்கள் விற்பனைக்கு வருகின்றன.
பூவன் வாழை, தேன் வாழை, செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், மோரீஸ் எனும் திசு வாழை போன்ற பல்வேறு வாழை ரகங்கள் சந்தைகளுக்கு வருகின்றன. இந்நிலையில், கோவில் திருவிழா நடக்கும் ஆடி மாதத்தில், சுழன்றடிக்கும் சூறாவளி காற்று காரணமாக, வாழைத்தார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதனால், இவற்றின் வரத்து குறைந்து, விலையும் அதிகரித்து உள்ளது.
இதன்படி, பூவன் தார் தலா, 350 முதல், 400 ரூபாய்க்கும், மோரீஸ், 400 ரூபாய்க்கும், ரஸ்தாளி, 450 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கற்பூரவல்லி 250 ரூபாய்க்கும், செவ்வாழை 550 ரூபாய் என்ற அளவிலும் விலை உயர்ந்துள்ளது.
ஆடி மாதம்ஆடி மாதக் காற்றில், வாழை இலைகள் கிழிந்ததால், வாழை இலைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், ஓட்டல் உள்ளிட்டவைகளுக்கு விற்கப்படும் வாழை இலை விலை, தலா, 1.50 ரூபாயில் இருந்து, மூன்று ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து, ஆத்தூர் வாழை இலை வியாபாரி கணேசன் கூறியதாவதுதிருச்சி, தஞ்சாவூர், திருவையாறு மற்றும் ஆத்தூர் பகுதிகளில் இருந்து, வாழை இலைகள் விற்பனைக்கு வருகின்றன. பூவன் ரக வாழை இலை, ஓட்டல் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகிறது. தற் போது, ஆடிக் காற்று,கடுமையான வெயில் மற்றும் பாசன வசதி இல்லாததாலும், வாழை இலைகள் கிழிந்து வருவதாலும், வாழை இலை வரத்து குறைந்து விட்டது.
பாசன வசதிதற்போது, 100 இலை கொண்ட ஒரு கட்டை, 600 ரூபாயில் இருந்து, 1,000 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். இதில், சாப்பாடு இலை தலா மூன்று ரூபாய்க்கும், டிபன் இலை, 2.50 ரூபாய்க்கும், பெரிய இலை, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில், வாழைத் தார், வாழை இலை உற்பத்தி இருக்கும்.வாழை பயிர்களுக்கு போதிய பாசன வசதி இல்லாததால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளது. இவ்வாறு கணேசன் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|