பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரியும்பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரியும் ... 6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை 6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை ...
பெட்ரோல் விற்பனையில் இழப்பு புலம்பும் நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2012
00:40

புதுடில்லிபொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், கடந்த மாதம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 0.70 பைசா உயர்த்தியுள்ள போதிலும், அவை, லிட்டருக்கு 1.37 ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாக, மத்திய பெட்ரோலிய அமைச்சர் எஸ்.ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.
கடந்த 2011 - 12ம் நிதியாண்டில், சர்வதேச சந்தையில், 111.89 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நடப்பு நிதியாண்டில், 6 சதவீதம் குறைந்து, 105.22 டாலராக சரிவடைந்துள்ளது.இருப்பினும், கடந்த நிதியாண்டில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 47.95 ஆக இருந்தது. இது, நடப்பாண்டில், 54.64 ஆக சரிவடைந்து போயுள்ளது. இதனால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், 7 சதவீதம் உயர்ந்து, 5,365 லிருந்து, 5,749 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கியது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் மட்டும், பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நான்கு முறை மாற்றி அமைத்துள்ளன.
எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், 12.06 ரூபாயும், மண்ணெண்ணெய் விற்பனை யில் 28.54 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் 231 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களின் எரிபொருள் விற்பனை இழப்பு.நடப்பு நிதியாண்டில் 47,811 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)