பதிவு செய்த நாள்
15 ஆக2012
00:40
புதுடில்லிபொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், கடந்த மாதம், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 0.70 பைசா உயர்த்தியுள்ள போதிலும், அவை, லிட்டருக்கு 1.37 ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாக, மத்திய பெட்ரோலிய அமைச்சர் எஸ்.ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.
கடந்த 2011 - 12ம் நிதியாண்டில், சர்வதேச சந்தையில், 111.89 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நடப்பு நிதியாண்டில், 6 சதவீதம் குறைந்து, 105.22 டாலராக சரிவடைந்துள்ளது.இருப்பினும், கடந்த நிதியாண்டில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 47.95 ஆக இருந்தது. இது, நடப்பாண்டில், 54.64 ஆக சரிவடைந்து போயுள்ளது. இதனால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், 7 சதவீதம் உயர்ந்து, 5,365 லிருந்து, 5,749 ரூபாயாக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கியது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் மட்டும், பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நான்கு முறை மாற்றி அமைத்துள்ளன.
எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், 12.06 ரூபாயும், மண்ணெண்ணெய் விற்பனை யில் 28.54 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் 231 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களின் எரிபொருள் விற்பனை இழப்பு.நடப்பு நிதியாண்டில் 47,811 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|