பெட்ரோல் விற்பனையில் இழப்பு புலம்பும் நிறுவனங்கள்பெட்ரோல் விற்பனையில் இழப்பு புலம்பும் நிறுவனங்கள் ... 6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை 6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏறுமுகத்தில் "சென்செக்ஸ்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2012
00:43

மும்பைநாட்டின் பங்கு வர்த்தகம், இரண்டாவது நாளாக, செவ்வாய்கிழமையன்றும் நன்கு இருந்தது. சென்ற ஜூலை மாதம், பொது பணவீக்கம் 6.87 சதவீதமாக குறைந்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இதனால், வரும் செப்டம்பரில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், இந்திய பங்குச்சந்தை எழுச்சி கண்டது.
மேலும், ஜப்பான் அரசு, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, மதிப்பீட்டை விட உயர்ந்தது போன்றதகவல்களால், ஆசியா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ஆரோக்ய பராமரிப்பு, மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 94.75 புள்ளிகள் உயர்ந்து, 17,728.20 புள்ளிகளில் நிலைகொண்டது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி', 32.45 புள்ளிகள் உயர்ந்து, கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர், 5,380.35 புள்ளிகளை எட்டியது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)