பதிவு செய்த நாள்
15 ஆக2012
00:43
மும்பைநாட்டின் பங்கு வர்த்தகம், இரண்டாவது நாளாக, செவ்வாய்கிழமையன்றும் நன்கு இருந்தது. சென்ற ஜூலை மாதம், பொது பணவீக்கம் 6.87 சதவீதமாக குறைந்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இதனால், வரும் செப்டம்பரில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பில், இந்திய பங்குச்சந்தை எழுச்சி கண்டது.
மேலும், ஜப்பான் அரசு, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, மதிப்பீட்டை விட உயர்ந்தது போன்றதகவல்களால், ஆசியா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ஆரோக்ய பராமரிப்பு, மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 94.75 புள்ளிகள் உயர்ந்து, 17,728.20 புள்ளிகளில் நிலைகொண்டது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 11 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி', 32.45 புள்ளிகள் உயர்ந்து, கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர், 5,380.35 புள்ளிகளை எட்டியது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|