பதிவு செய்த நாள்
15 ஆக2012
00:50
நடப்பு 2012 - 13ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, சராசரியாக நாள்தோறும், 8,600 பேர் கணக்கை முடித்துக் கொண்டு வெளியேறியுள் ளனர். அதாவது, ஒரு மாதத்திற்கு சராசரியாக 2.58 லட்சம் கணக்குகள் முடிக்கப்படுகின்றன. பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களின் மீதானவருவாய் குறைந்துள்ளது. அது போன்று, பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்களின் (ஈ.எல்.எஸ்.எஸ்.) வருவாய் வளர்ச்சியும் சரிவடைந்துள்ளது.
முதலுக்கே மோசம்: ஒரு சில பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள், முதலுக்கே மோசமாக உள்ளன. போட்ட முதலீட்டிற்கு பாதிப்பு வரும் பட்சத்தில், முதலீட்டாளர்கள், இழந்தவரை போதுமென்ற முடிவுடன் கணக்கை முடித்துக் கொள்கின்றனர்.இந்தவகையில், கடந்த நான்கு மாத காலத்தில் (ஏப்., - ஜூலை), 10 லட்சத்திற்கும் அதிகமான அளவிற்கு பரஸ்பர நிதி திட்ட கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. இது, கடந்த இரண்டு நிதியாண்டு களில், மொத்தம் முடிக்கப்பட்ட கணக்குகளில், மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
அளவுகோல்சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியுள் ளது. இது, பங்குச்சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தி, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின்வருவாய் சரிய வழிவகுத்துள்ளது.இ.எல்.எஸ்.எஸ்., பரஸ்பர நிதிதிட்டங்களில் முதலீட்டு காலம், குறைந்த பட்சம் மூன்று ஆண்டு களாகும். ஆனால், இந்த காலத்திற்குப் பிறகும், முதலீட்டின் மீதான வருவாய் கிடைக்காத நிலை உள்ளது. "இத்த கைய நிலைமை, நீண்ட கால முதலீட்டிற்கான அளவுகோல் எது என்பது குறித்த கேள்வியை முதலீட்டாளர் களி டம் எழுப்பியுள்ளது' என எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின்நிர்வாக இயக்குனர் தீபக் சட்டர்ஜி தெரிவித் துள்ளார்.
இழப்புரெலிகேர் மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சவ்ரப் நானாவதி கூறுகையில், "முறையான சேமிப்பு திட்டத்தின் (எஸ்.ஐ.பி.) கீழ்,மூன்றாண்டுகளுக்கு மேலாக பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட் டங்களில் முதலீடு செய்தவர்கள் கூட இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். இத் தகைய காரணங்களால், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் பொலிவிழந்துள்ளன.
சென்ற ஏப்ரல் மாத நிலவரப்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள், மேற்கண்ட திட்டங்களின் கீழ் கையாண்ட முதலீட்டு கணக்குகளின் எண்ணிக்கை 3.73கோடியாக இருந்தது.இது, மே மாதம் 3.71 கோடியாகவும், ஜூன் மாதம் 3.69 கோடியாகவும் குறைந்து போனது. ஜூலை மாதம் மட்டும் 3.27 லட்சம் கணக்குகள் முடிக்கப்பட்டு, மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 3.65 கோடியாக மிகவும் குறைந்து போனது.
சென்ற நிதியாண்டில், நாள்தோறும் சராசரியாக 4,500 கணக்குகள் முடிக்கப்பட்டு வந்தன. இது, நடப்பு நிதி யாண் டில், சென்ற ஜூலை மாதம் வரையிலுமாக, நாள்தோறும் முடிக்கப்படும் கணக்கு களின் எண்ணிக்கை 8,600 ஆக உயர்ந்துள்ளது.
கணக்கீடுகணக்கு முடிப்பு என்பது, திட்டகாலத்தின் முடிவு, முதலீட்டாளர்கள் இடையிலேயே வெளியேறுவது
உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை கொண்டதாகும்.மேலும், ஒரு பரஸ்பர நிதி நிறுவனத்தின் ஒரே மாதிரியான பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் இணைப்பும் அதில் அடங்கும். அதாவது, இரு வகை திட்டங்களிலும் ஒருவர் முதலீடு செய்திருக்கும்பட்சத்தில், அவை ஒன்றிணைக்கப்படும் போது, கணக்குகளின் எண்ணிக்கை மட்டும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|