பதிவு செய்த நாள்
16 ஆக2012
02:21
துபாய்:துபாய் ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவில் சொத்துக்களை வாங்கி குவிப்பதில், இந்தியர்கள் முதலிடத்தை தக்கவைத்து கொண்டுள்ளனர் என, ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் புரமோஷன் அண்டு மேனேஜ்மென்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்பு 2012ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அன்னிய முதலீட்டாளர்கள், 33,300 கோடி ரூபாய் மதிப்பிலான, 12,875 சொத்துக்களை துபாயில் வாங்கியுள்ளனர்.இதில், இந்தியர்கள், 5,760 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,153 சொத்துக்களை வாங்கி முதலிடத்தை பிடித்துள்ளனர். இதற்கு அடுத்தாற்போல், பாகிஸ்தானியர்கள், 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான 1,814 சொத்துக்களை வாங்கியுள்ளனர். இவர்களை அடுத்து, இங்கிலாந்து முதலீட்டாளர்கள், 1,564 சொத்துக்களை வாங்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில், ஈரான் (1,057 சொத்துக்கள்) மற்றும் ரஷ்யா (694 சொத்துக்கள்) நாட்டினர் உள்ளனர்.
இவர்கள் தவிர, துபாய் முதலீட்டாளர்கள் (416 சொத்துக்கள்), அமெரிக்கர்கள் (415 சொத்துக்கள்), கனடா நாட்டினர் (329 சொத்துகள்) ஆகியோர் முறையே, ஆறு, ஏழு மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளனர்.மதிப்பீட்டு காலத்தில், துபாய் நாட்டின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் 95,380 கோடி ரூபாய் என்றளவிற்கு நடைபெற்று உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 21 சதவீத வளர்ச்சியாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|