பதிவு செய்த நாள்
16 ஆக2012
02:22
மத்திய வேளாண் அமைச்சகம், நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கு, பருப்பு வகைகளின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி யுள்ளது. இதன்படி, ஒரு குவிண்டால் துவரம் பருப்பின் கொள்முதல் விலை,3,840 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அது போன்று, ஒரு குவிண்டால் பாசிப் பருப்பின் விலை, 4,400 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உளுத்தம் பருப்பின் குறைந்தபட்ச ஆதரவு விலை, மாற்றமின்றி, குவிண்டாலுக்கு, 4,300 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது.
வேளாண் செலவு மற்றும் விலைகள் ஆணையம், நடப்பு நிதியாண்டிற்கு, ஒரு குவிண்டால் துவரம்பருப்பிற்கான, குறைந்தபட்ச ஆதரவு விலையை 4,000 ரூபாயாகவும், ஒரு குவிண்டால் பாசிப் பருப்பிற்கான விலையை, 4,500 ரூபாயாகவும் உயர்த்துமாறு, மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்திருந்தது. ஆனால், இவற்றை விட, குறைவாகவே மத்திய வேளாண் அமைச்சகம் விலை நிர்ணயம் செய்துள்ளது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|