பதிவு செய்த நாள்
16 ஆக2012
02:24
ஈரோடு:ஈரோடு ஏலச் சந்தையில், மஞ்சள் விலை, குவிண்டாலுக்கு, 321 ரூபாய் வரை குறைந்தது.ஈரோட்டில் உள்ள நான்கு மஞ்சள் விற்பனைக் கூடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. அப்போது, மஞ்சள் விலை திடீரென, குவிண்டாலுக்கு, 321 ரூபாய் வரை சரிந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, ஈரோடு, அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலர்கள் கூறியதாவது:ஏலத்திற்கு 1,781 மஞ்சள் மூட்டைகள் மட்டுமே கொண்டு வரப்பட்டன. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநில மஞ்சள் வியாபாரிகள் வருகை குறைந்து, உள்ளூர் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. இவர்கள், "மஞ்சள் தரம் குறைந்துள்ளது, தேக்கம் அதிகரித்துள்ளது' என, கூறி, திட்டமிட்டு விலையைக் குறைத்து வருகின்றனர்.சென்ற வாரம், விரலி குவிண்டால், 6,000 ரூபாய் முதல், 6,636 ரூபாய்க்கு விற்பனையானது.
இது, தற்போது 321 ரூபாய் வரை குறைந்து, 5,716 ரூபாய் முதல், 6,315 ரூபாய் வரை விற்பனையானது.சென்ற வாரம், ஒரு குவிண்டால் கிழங்கு மஞ்சள், 5,484 ரூபாய் முதல், 6,299 ரூபாய் வரை விலை போனது. இது, 260 ரூபாய் குறைந்து, 5,529 முதல், 6,039 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 1,462 மூட்டைகள் மட்டுமே விற்பனையாயின. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|