பதிவு செய்த நாள்
16 ஆக2012
13:48
புதுடில்லி: நாட்டின் மறைமுக வரி வசூல், நடப்பு நிதியாண்டில், சென்ற ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், 1.45 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் திரட்டப்பட்டதை (1.19 லட்சம் கோடி ரூபாய்) விட, 22 சதவீதம் அதிகமாகும்.
மறைமுக வரிகள் பிரிவின் கீழ், சுங்கம், கலால் மற்றும் சேவை வரிகள் இடம் பெற்றுள்ளன. மதிப்பீட்டு காலத்தில், சேவை வரி வாயிலாக, 38,070 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் வசூலான தொகையை (21,210 கோடி ரூபாய்) விட, 80 சதவீதம் அதிகமாகும். கணக்கீட்டு காலத்தில், கலால் வரி, 19 சதவீதம் உயர்ந்து, 55,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சுங்க வரி வசூல், 0.81 சதவீதம் அதிகரித்து, 51,920 கோடி ரூபாய் என்றளவில் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், மறைமுக வரி வசூல் வாயிலாக, 5.05 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த, 2011-12ம் நிதியாண்டிற்கான இலக்கை விட, 27 சதவீதம் அதிகமாகும். சென்ற நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வசூல், 3,92,781 கோடி ரூபாயாக இருந்தது. இது, பட்ஜெட் மதிப்பீட்டில், 99.6 சதவீதமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|