பதிவு செய்த நாள்
16 ஆக2012
15:19
புதுடில்லி: நிலக்கரி மற்றும் எரிவாயு பற்றாக்குறையால், சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், 700 கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பயன்பாடு மதிப்பீட்டு காலத்தில், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, 290 கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தி இழப்பும், எரிவாயு பற்றாக்குறை காரணமாக, 400 கோடி யூனிட் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த அளவில், ஏப்ரல்-ஜூன் வரையிலான காலத்தில், உச்சகட்ட மின் பற்றாக்குறை 9 சதவீதம் என்றளவில் இருந்தது. உச்சகட்ட மின் பற்றாக்குறை என்பது, மின் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ள நேரங்களில், இதன் உற்பத்திறன் குறைந்து போவதாகும்.
மதிப்பீடு மத்திய அரசு, நடப்பாண்டில், 92,000 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும் என மதிப்பிட்டுள்ளது. இதில், நிலக்கரியை அடிப்படையாக கொண்ட திட்டங்கள் வாயிலாக, 76,000 கோடி யூனிட் மின்சாரமும், நீர்மின் திட்டங்கள் வாயிலாக, 12,200 கோடி யூனிட் மின்சாரமும் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூட்டான் நாட்டிலிருந்து, 500 கோடி யூனிட் மின்சாரம் பெறவும் மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|