பதிவு செய்த நாள்
17 ஆக2012
00:20
புதுடில்லி:பணவீக்கம், தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில், வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் குறைப் பது குறித்து முடிவு எடுக்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.சென்ற ஜூன் மாதத்தில், பணவீக்கம், 7.25 சதவீதமாக இருந்தது. இது, ஜூலை மாதத்தில், 6.87 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 5 - 6 சதவீதத்தை விட, இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் மேலும் குறையும் போது, வட்டி விகிதமும் குறையும். இருப்பினும், பணவீக்கம் நிலையான அளவில் குறைந்து வருகிறதா என்பதை ரிசர்வ் வங்கி, உன்னிப்பாக கவனித்து வருகிறது என, இவ்வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி தெரிவித்தார்.
வட்டி விகித உயர்வால், தொழில் முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.எனவே, வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, நிதியமைச்சர் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தெரிவித்துள்ள கருத்து, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|